×

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

மதுரை, மார்ச் 21: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தேர்தல் முடியும் வரை தனிநபர்கள் உரிமம் ெபற்ற துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் இதுபோல் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ள தனிநபர்கள் அனைவரும், அருகில் உள்ள காவல் நிலையங்களில் அவற்றை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும். அவற்றுக்கு காவல் நிலையத்தில் இருந்து ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான பின், துப்பாக்கிகளை அவற்றின் உரிமையாளர்கள் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். என, மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

The post உரிமம் பெற்ற துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி